சிறப்புப் படைகள் ரகசிய இடத்துக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சி:
சங்கர மடம் குறித்த விவகாரங்களை விசாரித்து வந்த சிறப்புப் படைகள் ரகசிய இடத்துக்கு கொண்டு போகப்பட்டுள்ளன.
இதுவரை இந்தப் படைகள் காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தைத் தான் தலைமையகமாகக் கொண்டுஇயங்கி வந்தன. இப்போது இந்தப் படைகளை இங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றியுள்ளன.
இவை இப்போது எங்கிருந்து இயங்குகின்றன என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஞ்சி ஏகாம்பரேஸ்வர் குளத்தில் மர்மமான முறையில் மூழ்கியத ஆந்திராவைச் சேர்ந்த பக்தரும் வேத விற்பன்னருமானஅய்யப்ப ஷர்மாவின் மரணம் குறித்த விசாரணை சூடு பிடித்துள்ளது.
இது குறித்து ஆந்திராவில் அவரது வீட்டினரிடம் விசாரணை நடத்திவிட்டுத் திரும்பியுள்ள போலீஸ் படை, விரைவில் இது தொடர்பாகமடத்தின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications