ஹைதராபாத்தில் அப்பு கைது?
சென்னை:
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப்படையின் தலைவன் அப்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்பரவியுள்ளது. அவனை சென்னைக்குக் கொண்டு வர அரசு விமானம் ஹைதராபாத் அனுப்பபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான கூலிப் படைத் தலைவன் அப்பு தொடர்ந்துதலைமறைவாக இருந்து வருகிறான். அவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ன.
இந் நிலையில் 7 பேர் கொண்ட தனிப் படை போலீஸார் தமிழக அரசின் தனி விமானம் மூலம் இன்று ஹைதராபாத் புறப்பட்டுச்சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பு குறித்த மிக முக்கிய தகவல் கிடைத்துள்ளதாலேயே தனிப் படையினர்தனி விமானம் மூலம் விரைந்துள்ளதாக கூறப்பட்டது.
குறிப்பாக, அப்பு பிடிபட்டுள்ளதாகவே பேச்சு எழுந்துள்ளது.
விமானத்தில் யார், யார் சென்றுள்ளார்கள் என்ற தகவல் தெரியவில்லை. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கும், விமானத்தில் சென்றது யார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்ததாக கூறப்படுகிறது.ஹைதராபாத் சென்றுள்ள இக்குழுவினர் தேவைப்பட்டால் டெல்லி செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அப்புவுடன்தான் பிரேம்குமார் சென்னைக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
ஜெயேந்திரரும் இப்படித்தான் தனி விமானம் மூலம் கைது செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ரவி சுப்பிரமணியம் கைதா?
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை தமிழக போலீஸ் படைடெல்லியில் வைத்து கைது செய்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளன.
ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் ரவி சுப்பிரமணியம். சங்கரட மடம் சார்பிலான காண்டிராக்டுகள்அனைத்தும் ரவி சுப்ரமணியத்திற்கே கொடுக்கப்படுவது வழக்கம்.
சங்கரராமனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் இவர்தான். சங்கராச்சாரியார் உத்தரவுப்படி கட்டடம் கட்டகொடுக்கப்பட்ட ரூ. 65 லட்சத்தில் ரூ. 15 லட்சத்தை கொலையாளிகளுக்குத் தந்துள்ளார்.
தலைமறைவாகி விட்ட ரவி சுப்ரமணியத்தைப் பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. டெல்லியில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு ஒரு போலீஸ் படை சென்றுள்ளது.
இந் நிலையில் நேற்று ரவி சுப்ரமணியம் கைது செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வருகின்றன. இதை காவல்துறை வட்டாரங்கள்மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்துவிட்டன.
இன்று அவர் சென்னைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.