விஜயக்குமாருக்குப் புதிய பதவி
சென்னை:
தமிழக சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக உள்ள டிஜிபி விஜயக்குமார், சென்னையில் உள்ள போலீஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் மற்றும்சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி அகாடமியின் ஆகியவற்றின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் கூடுதல் டிஜிபியாக இருந்தார் விஜயக்குமார். வீரப்பன் வதத்திற்குப் பிறகு அதிரடிப்படையினர்அனைவருக்கும் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து விஜயக்குமார் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டார்.
இருப்பினும் புதிய பதவியில் அவர் நியமிக்கப்படாமல் அதிரடிப்படையின் டிஜிபியாகவே தொடர்ந்து வந்தார். இந் நிலையில் சென்னையில்உள்ள போலீஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி அகாடமியின் திட்ட இயக்குனராக விஜயக்குமார்நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்போடு, தமிழக அதிரடிப் படை (தமிழக கருப்புப் பூனைப் படை வீரர்கள்) மற்றும் தமிழக அதிரடிப் படை பள்ளியின் சிறப்புநடவடிக்கைளையும் அவர் கவனித்து வருவார்.
அத்தோடு வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படை தலைவராகவும் அவர் தொடர்ந்து நீடிப்பார் என அரசு செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.