டெல்லியில் வைத்து அப்புவிடம் விசாரணை?
சென்னை:
கூலிப் படைத் தலைவன் அப்பு கைது செய்யப்பட்டது தொடர்பாக பலத்த ரகசியம் காத்து வருகிறது தமிழக அரசு.இதனால் இந்த விஷயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
அவனை டெல்லியில் வைத்து தமிழக போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
சங்கரராமன் கொலையை நகழ்த்திய கூலிப் படையின் தலைவனான அப்பு தலைமறைவாக இருந்து வந்தான். இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான விமானம் நேற்று காலை ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது.
அதில் காஞ்சிபுரம் எஸ்பி பிரேம்குமார் உள்ளிட்ட போலீஸார் சென்றதாக கூறப்பட்டது. அப்பு ஆந்திராவில்பதுங்கியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழக போலீஸ் அதிகாரிகளின் இந்த திடீர் பயணம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
முற்பகலில் அப்பு சித்தூர் மாவட்டம் புத்தூர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்தன.அப்புவை கூட்டி வரத்தான் விமானத்தில் அதிகாரிகள் விரைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் மேலும் பரபரப்புஅதிகரித்தது.
சிறிது நேரம் கழித்து ரவி சுப்ரமணியமும் டெல்லியில் பிடிபட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இருவரையும்அழைத்துக் கொண்டு மாலையில் விமானம் சென்னை திரும்பும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி தமிழக அரசின் தனி விமானம் சென்னைக்குத் திரும்பவில்லை. அப்பு குறித்தும் எந்தத்தகவலும் இல்லை. இதனால் குழம்பிப் போன செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் விமான நிலைத்திலேயேநள்ளிரவு வரை காத்திருந்தனர்.
அப்பு, ரவிசுப்ரமணியம் கைது குறித்த தகவல்களை காவல்துறையினர் உறுதிப்படுத்த மறுத்து வருகின்றனர்.
புத்தூர் காவல் நிலையத்திலும் அப்பு பிடிபட்டது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே, அப்பு டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து அவனிடம் விசாரணை நடந்துவருவதாகவும் கடைசியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி சுப்ரமணியமும் டெல்லியிலேயே வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பின்னர் இருவரையும் இன்று காவல்துறை சென்னைக்கு கொண்டு வரலாம் என்றும் தெரிகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications