டிச. 6: முஸ்லீம்கள் பேரணிக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி முஸ்லீம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தின நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தெளகீத் ஜமாத்அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி பேரணி நடத்துவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் அலாவுதீன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், எங்களது போராட்டம் அறவழியில் அமைந்தது. இதற்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது.
ஆனால் நாங்கள் திட்டமிட்டபடி பேரணி நடத்துவோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. அமைதியான முறையில் எங்களது பேரணியும்,ஆர்ப்பாட்டமும் நடந்தே தீரும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications