For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் உயிர் தியாகம்: பாரதிராஜா பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

தமிழ் ஈழம் அமைவதற்காக விடுதலைப் புலிகள் செய்த உயிர்த் தியாகம் போற்றத்தக்கது என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

இலங்கை ராணுவத்தினருடனான சண்டையில் இறந்த 17,800 புலிகளின் நினைவைப் போற்றும் விதமாக யாழ்ப்பாணத்தில் மாவீரர் நிகழ்ச்சிநடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு பாரதிராஜா பேட்டியளித்தார். அந்தப்பேட்டியை புலிகள் ஆதரவு இணைய தளம் வெளியிட்டுள்ளது.

பேட்டியில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:

நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனது பிறந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வில் இருந்தேன். போரினால் ஏற்பட்ட இழப்புகளைநேரில் பார்க்கும்போது மனதில் மிகுந்த பாரம் உண்டானது.

இத்தகைய இழப்புகள்தான் இந்த மண்ணில் வீரத்தை விதைத்துள்ளது எனக் கருதுகிறேன். மாவீரர்கள் தினத்தில் கலந்து கொண்டது குறித்தபெருமைப்படுகிறேன்.

புலிகளின் உயிர்த் தியாகம் போற்றத்தக்தக்கது. கடந்த 30 ஆண்டுகளாக தங்களது கொள்கைளை அடைய எவ்வளவு தீரத்துடன் புலிகள்போராடினார்களோ, அதேபோல் தொடர்ந்து போராடினால் தமிழ் ஈழத்தை அடைவது உறுதி.

தமிழக மக்கள் அரும் சாதனைகளையும், மகத்தான வளர்ச்சிகளையும் கண்டுள்ளனர். ஆனால் அவற்றை ஈழத் தமிழர்களின் சாதனைகளுடன்சிறியதாகி விடும். உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று, சாதனை படைத்த தமிழர்களை சந்தித்தால் அவர்கள் இலங்கை தமிழர்களாகஇருப்பதைக் காண முடியும்.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் நான் உறவாடியபோது, ஒவ்வொருவர் மனதிலும் சொல்வதற்கு ஏராளமான சோகக் கதைகள் இருந்தன.

மாவீரர் தினத்தில் நான் கலந்து கொண்டது என் மனதை உருக்கி விட்டது. போரில் உயிரிழந்த மாவீரர்களின் கல்லறைகளைக்காணும்போது, எனது முதுகுத் தண்டு சிலிர்த்துவிட்டது என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X