ஜெயேந்திரர் கைது: பிஷப்புகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயேந்திரர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ பேராயர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு கிறிஸ்தவ பேராயர்கள் சங்கத்தின் கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோவெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பழமைவாதிகள் நடத்தும் போராட்டம் கண்டனத்துக்குரியது. ஜெயேந்திரர் கைதில்கிறிஸ்தவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி மக்கள் கவனத்தை திசை திருப்ப இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஜெயேந்திரர் விவகாரத்தில் இதுவரை நடந்து வருவது அனைத்தும் சரியானவையே, சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications