கோலிவுட்டில் பாய்ந்த சங்கர மட பணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayendrarசங்கர மடத்தின் பணம் பல பக்கமும் பாய்ந்திருக்கும் நிலையில் கோலிவுட்டிலும் முதலீடு செய்யப்பட்ட பணம் குறித்தும் ரகசியமாகவிசாரிக்க ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

குறிப்பாக தமிழின் இப்போதைய முன்னணி ஹீரோ நடிக்க, கிராபிக்ஸ்- பிரமாண்டம் புகழ் இயக்குனர் தயாரித்து வரும் படத்திற்கு ரூ. 5கோடி வரை சங்கர மடத்தில் இருந்து பைனான்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த விருது தயாரிப்பாளர் தவிர சங்கர மடத்துடன் நெருக்கம் உள்ள மேலும் 4 தயாரிப்பாளர்கள் தொடர் தோல்விப் படங்களையே தந்துகொண்டிருந்தாலும் தொடர்ந்து படம் எடுத்துவிட்டுக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருப்பது போலத்தெரியவில்லை.

அமுதசுரபியாய் மடத்தில் இருந்து பணம் காய்ச்சிக் கொண்டிருக்க, கோலிவுட்டில் அழகு தேவதைகளை வளைத்துப் போட்டு உப்புமாபடங்களை கிண்டி தந்து கொண்டே இருக்கின்றனர்.

இப்போது ரகசியமாய் போலீஸ் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இவர்கள் கிலியில் உள்ளனர். இவர்களது ஆபிஸ், வீட்டுப் போன்களின்ரிசீவர்கள் கீழே எடுத்து வைக்கப்பட்டுவிட்டது போலும்.. எப்போது டயல் செய்தாலும் என்கேஜ்ட் டோன் தான் கேட்க முடிகிறது.

அதே போல செல்போன்களும் ஸ்விட் ஆப் செய்யப்பட்டிருக்கின்றன. கோடம்பாக்கம் பக்கமும் இந்தத் தலைகளைப் பார்க்க முடியவில்லை.சென்யைை விட்டு இவர்கள் எஸ்கேப் என்கின்றனர்.

விரைவில் இந்தத் தயாரிப்பாளர்களிம் நிச்சயம் விசாரணை நடக்கும் என்கிறது காவல்துறை வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+