For Quick Alerts
For Daily Alerts
Just In
பாஜகவுக்கு எதிராக சிபிஎம் போராட்டம்
காஞ்சிபுரம்:
பாஜக-அதிமுகவைக் கண்டித்து திமுக தலைமையில் நடக்கும் போராட்டத்தில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் மீதான வழக்கினை மதச் சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட முனையும் பா.ஜ.க.- சங் பரிவாரங்கள், சேது சமுத்திரத்திட்டத்தை சீர்குலைக்க முயலும் அதிமுக ஆகியவற்றை எதிர்த்தும்,
வறட்சி-வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவும்டிசம்பர் 10ம் தேதியன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், மதிமுக, பா.ம.க., காங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் போராட்டத்தில் பொது மக்களும் ஏராளமான அளவில் பங்கெடுக்கவேண்டுகிறேன் என்று கோரியுள்ளார் வரதராஜன்.
Comments
Story first published: Monday, December 6, 2004, 5:30 [IST]