1,000 கோயில்களில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
தமிழகத்தில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் அடுத்த ஆண்டு 1,000 கோயில்களில் கும்பாபிஷேகம்நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆதி திராவிடர்கள் வசித்து வரும்பகுதிகளில் உள்ள 1,000 கோயில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதற்காக கோயில் ஒன்றுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 17.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 4 கோயில்கள் உள்பட மொத்தம் 7 கோயில்களில் தங்கத் தேர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில்தேரோட்டம் நடத்தப்படும்.
பழனியில் தயாரிப்பது போல திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் விபூதி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications