குடும்ப கட்டுப்பாடு வேண்டாம்: வி.எச்.பி.
திருச்சி:
இந்துக்கள் 2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்ற கொள்கையை பின்பற்றக் கூடாது. அதன் மூலம் மட்டுமே இந்துக்களின் எண்ணிக்கைகுறைவதை தடுக்க முடியும் என்று விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழக தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மணியன் பேசுகையில்,
இந்தியாவின் சில மாநிலங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போயுள்ளது. இதை தடுக்க வேண்டிய நிலையில் நாம்உள்ளோம்.
இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமானால், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்குமேல் வேண்டாம் என்ற கொள்கையை இந்துக்கள் பின்பற்றக் கூடாது. நிறைய குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.
தமிழகத்தில் மயிலாடுதுறையில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளார்கள். அங்கு முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமாகஅதிகரித்துள்ளது. இதை இந்துக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications