நேபாளத்திற்குத் தப்ப ரவிசுப்ரமணியம் முயற்சி?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் நேபாளத்திற்குத் தப்பமுயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு அடுத்தபடியாக 2வது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் ரவிசுப்ரமணியம். அவரைடெல்லியில் வைத்து தமிழக போலீஸ் படை பிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
ஆனால் மிகப் பெரும் சஸ்பென்ஸுக்குப் பின்னர் அந்தத் தகவல் தவறென்று தெரியவந்தது. அவரை போலீசார் நழுவவிட்டுவிட்டனர்.
இந் நிலையில் ரவிசுப்ரமணியம் நேபாளத்திற்குத் தப்பியோட முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வருகின்றன.
டெல்லியில்தான் அவர் பதுங்கியிருப்பதாகவும், நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல அவர் தீவிரமாக முயலுவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தமிழக காவல்துறையின் இரு படைகள் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கி அவரைப் பிடிக்க முயன்று வருகின்றன.
இதற்கிடையே அப்புவும் இன்னும் பிடிபடவில்லை என்றே கூறப்படுகிறது. அவர் ஆந்திராவில்தான் பதுங்கியிருப்பதாகவும் விரைவில்பிடித்து விடுவோம் என்றும் போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
க்யூ பிராஞ்ச் போலீஸ் மூலம் அப்புவுக்கு சில சிக்னல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. உயிருக்கு ஆபத்து இருக்காது என்ற உத்தரவாதம்தரப்பட்டு வருகிறது. இதனால் அவனே விரைவில் சரணடைவான் என்கிறது போலீஸ் வட்டாரம்.












Click it and Unblock the Notifications