போலீஸை திகைக்க வைக்கும் சதுர்வேதி
சென்னை:
சதுர்வேதி சாமியாருக்கு மேலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதைபோலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆசிரமம் அமைக்க வீடு கொடுத்த சென்னை தொழிலதிபரின் மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளைக் கடத்திச் சென்று பாலியல்கொடுமை செய்ததாக கூறி சதுர்வேதி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் சதுர்வேதி சாமியாருக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டதில் அவருக்குச் சொந்தமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில் இப்போது அந்த சொத்து பட்டியல் லிஸ்ட் மேலும் நீண்டு கொண்டே போகிறது.
கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்ற இடத்தில் சாமியாருக்குச் சொந்தமாக 7,140 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒருமாளிகையும் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க செல்வராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் படை மேல்கோட்டைசென்றுள்ளது.
இதேபோல ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள அகோபிலத்தில் 38 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டுள்ளார் சதுர்வேதி. இதுகுறித்துவிசாரிக்கவும் ஒரு தனிப்படை அகோபிலம் விரைந்துள்ளது.
காஞ்சிபுரம் சன்னதி தெருவில் ரூ. 13.50 லட்சம் மதிப்புள்ள வீடு இந்த சாமியார் பெயரில் உள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 6,540 சதுர அடி பரப்பளவில் நிலம், அதில் வீடு ஒன்றும் சதுர்வேதி பெயரில் உள்ளது.
அதே நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள நாங்கூர் என்ற கிராமத்தில் 40 சென்ட் நிலமும் சாமியார் பெயரில் உள்ளது.
அதுமட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் நிலம் உள்ளது. இதுகுறித்துபண்பாளன் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு அங்கு சென்றுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் 8.50 ஏக்கர் நிலமும், அதே ரோட்டில் கொஞ்சம் தள்ளி 16.50 ஏக்கர் நிலம்வாங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிலத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கோவில் கட்ட சதுர்வேதி திட்டமிட்டிருந்தார். அதற்காக ரூ. 2 லட்சம்முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாமியாரின் இந்த சொத்துப் பட்டியல் போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications