5 மாத குழந்தை செங்கல்லால் அடித்து படுகொலை
சென்னை:
சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் 5 மாதமே ஆன ஆண் குழந்தை செங்கல்லால் தலையில் அடித்து படுகொலைசெய்யப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியில் உள்ள பவர் குப்பத்தில் வசிப்பவர் சுபா தேசப்பன். இவருக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தைபிறந்தது. கார்த்திக் என்று அதற்கு பெயர் வைத்திருந்தனர்.
சுபாவின் கணவர் தாசப்பன் திங்கள்கிழமை இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில்தனது குழந்தையை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார் சுபா. திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.
இதையடுத்து சுபாவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் குழந்தையைத் தேடினர். அப்போது சுபாவின் வீட்டுக்கு அருகே கார்த்திக்தலையில் காயத்துடன் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.
குழந்தை செங்கல்லால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காசி மேடு பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத்தை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.