ஜெயேந்திரர்: உமா பாரதிக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் ஜெயேந்திரர் கைதைப் பயன்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றன என்று திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்காமல், இதற்குத் தொடர்பில்லாத காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.
ஜெயேந்திரரை உரிய மரியாதையுடன் நடத்துமாறு ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு மேல்சோனியா காந்தியிடம் இருந்து உமா பாரதி என்ன எதிர்பார்க்கிறார்?
உயர் சாதியினர் மட்டுமே கட்சியில் உயர்ந்த பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலை இருக்கும் பாஜகவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துவந்த உமா பாரதி இத்தகைய உயர் நிலைக்கு வந்திருக்கிறார். அதற்காக அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
அதன் காரணமாகவே அவரது பல நடவடிக்கைகளை இதுவரை விமர்சிக்காமல் இருந்து வந்துள்ளேன். ஆனால் இப்போது அவர்பேசியிருப்பது மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.