For Daily Alerts
Just In
கதிரவன், அம்பி, ரஜினி காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 3 பேரின் சிறைக் காவல் வருகிற 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் கூலிப் படையைச் சேர்ந்த அம்பி என்கிற அம்பிகாபதி, கதிரவன், ரஜினி என்கிற சின்னாஆகியோரின் சிறைக் காவல் முடிவடைந்ததால் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றுஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களது 3 பேரின் காவலையும் வருகிற 22ம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். அதன் பின்னர் 3பேரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
Story first published: Wednesday, December 8, 2004, 5:30 [IST]