நெய்வேலி சுரங்கம் தனியார்மயமில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சிபுசோரன் மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதற்கு பதிலளிக்க வேண்டிய சிபு சோரன் மக்களவையில் இல்லை.

தாமதமாக அவர் விவாதத்தில் கலந்து கொண்டார். அதற்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.அடுத்த முறை துறை தொடர்பான விவாதம் நடைபெறும்போது கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

இதையடுத்து சிபு சோரன் பேசுகையில்,

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் லாபம் தரும் பொதுத்துறை நிறுவனமாகும். 2003-04ம் ஆண்டில் மட்டும் ரூ.1,413 கோடி லாபம் ஈட்டித்தந்துள்ளது. எனவே அதை தனியார்மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+