ஜெயலலிதாவுக்கு உமா பாரதி வக்காலத்து
ஹூப்ளி:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து மெளனமாக இருப்பது குறித்து மத்திய பிரதேசமுன்னாள் முதல்வர் உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைது இந்தியாவிற்கு எதிரான சதியாகும். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மெளனம் சாதிப்பது சரியல்ல. அவர் தனதுகருத்தைக் கூற வேண்டும்.
கைது நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்பு இல்லை என்று நான் கூறவில்லை. இது அவரது விருப்பத்தின் பேரில்நடந்ததா அல்லது அவர் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டமிட்டு இந்து கலாச்சாரத்தை அழிக்கிறது.ஜெயேந்திரர் விவகாரத்தை அக் கூட்டணி எவ்வாறுகையாளுகிறது என்பதை மக்கள் விழிப்பாக கவனிக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டிருப்பது ஜெயேந்திரருக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிறையில் அவரை நான் சந்தித்தபோது, இந்த கைதுநடவடிக்கை தனது சந்நியாசத்தின் ஒரு பகுதி என்றும், தாய்நாட்டிற்கு இது ஒரு துரதிர்ஷடம் என்றும் கூறினார்.
நான் நிரபராதி. எனக்காக பிரார்த்திக்குமாறு மக்களிடம் கூறுங்கள். அதன்மூலம் நான் தூய்மையானவனாக வெளிவருவேன் என்றுஎன்னிடம் கூறினார்.
மிகப் பெரும் துறவியான ஜெயேந்திரருக்கு சிறையில் இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், அவர் சிறையில் இருப்பது இந்துமதத்தின் மீது இருக்கும் கரும்புள்ளியாகும் என்று உமா பாரதி கூறினார்.