For Daily Alerts
Just In
வங்கி அதிகாரியிடம் போலீஸார் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீஸார், காஞ்சி மடத்தின் பணப் பரிமாற்றம் குறித்து வங்கிஅதிகாரியிடம் இன்று விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலைக்கும் முன்னரும், பின்னரும் மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் குறித்துவிசாரித்தனர்.
இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கும்பகோணம் கிளையின் மேலாளர் அன்புவிடம் போலீஸார் சுமார் 90நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பு,
வங்கியின் மண்டல மேலாளர் சென்னையில் இல்லாததால் போலீஸார் அனுப்பிய சம்மனை நான் வாங்கினேன். அதனால் மண்டலமேலாளருக்குப் பதிலாக விசாரணைக்கு நான் ஆஜரானேன் என்று கூறினார்.
Comments
Story first published: Sunday, December 12, 2004, 5:30 [IST]