அரசு மரியாதையுடன் உடல் தகனம்
சென்னை:
இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடல் முழு அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமி சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் நேற்றிரவு இயற்கை எய்தினார். அவரது உடல் பின்னர்கோட்டூரிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலை அரசு மரியாதையோடு தகனம் செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி 21குண்டுகள் முழங்க எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் கல்கி முரளி இறுதிச் சடங்குகளை செய்தார். தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர்பன்னீர்செல்வம் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
இசைக் கலைஞர்கள் பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசிலா, எஸ்.ஜானகி, ஜேசுதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications