துபாய்: சம்பளம் கிடைக்காததால் தமிழர் தற்கொலை
துபாய்:
துபாயில் வேலை பார்த்த தமிழர் ஒருவர் சம்பளம் சரிவர கிடைக்காததால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் வெங்கடேசன், ரூ.90,000 அளவிற்கு கடன் வாங்கி அதை ஏஜெண்ட்டிடம் கொடுத்து துபாய் வந்தார்.ஆனால் கடந்த வேலை பார்த்த நிறுவனம் சரிவர சம்பளம் கொடுக்காமல் கடுமையாக வேலை வாங்கியுள்ளது.
இந் நிலையில் வெங்கடேசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ செலவுக்குக் கூட கையில் காசில்லாத நிலையில், தனதுசூபர்வைசரிடம் 50 திராம்ஸை முன்பணமாகக் கேட்டுள்ளார். அதற்கு சூபர்வைசர் பணம் தர மறுத்ததோடு, வெங்கடேசனைக் கடுமையாகத்திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் சம்பளப் பணத்தை தரக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.வெங்கடேசனுக்கு தரப்பட வேண்டிய சம்பளத்தை தமிழகத்தில் இருக்கும் அவரது சகோதரியிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
இந் நிலையில், அனைவருக்கும் சம்பளத்தை வழங்க நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.