ரகுவிடம் மீண்டும் நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Raghuவிஜயேந்திரர் தம்பி ரகுவிடம் நேற்று இரண்டாவது நாளாக 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நாளையும் அவரிடம்விசாரணை நடத்தப்படவுள்ளது.

சங்கர மடத்தில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே விசாரிக்கப்படாமல் இருந்து வந்தனர். அவர்களில் ஒருவர் விஜயேந்திரர், இன்னொருவர்அவரது தம்பி ரகு. இவர்களில் ரகுவிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இரவு 7 மணியளவில் ஆரம்பித்த விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது.

விசாரணைக்குப் பின்னர் சோர்ந்த முகத்துடன் ரகு காரில் ஏறி சங்கர மடம் சென்றார். அவரிடம் நாளையும் (திங்கள்கிழமை) விசாரணைநடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர மடத்தில் பெண்கள் வந்து போனது, பெண்களுடனான தொடர்புகள், சொர்ணமால்யாவுக்கும், சங்கர மடத்துக்கும் உள்ள தொடர்பு,அப்பு, ரவிசுப்ரமணியம் ஆகியோருக்கும், சங்கர மடத்திற்கும் ஏற்பட்ட தொடர்புகள் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் குறித்து ரகுவிடம்போலீஸார் குடைந்து குடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் விஜேயந்திரரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+