இலங்கை தப்ப முயன்ற 20 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக்குத் தப்பிச் செல்ல படகுக்காக காத்திருந்த 20 இலங்கை அகதிகளை பாம்பன் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையில் அமைதி திரும்பி வரும் நிலையில். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைமக்கள் தாயகம் செல்ல ஆர்வமாக உள்ளனர்.
இந் நிலையில் தருமபுரி, பொள்ளாச்சி, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் ஆகிய முகாம்களிலிருந்து 9 பெண்கள், ஒரு சிறுவன், 10ஆண்கள் ஆகிய 20 பேர் இலங்கை செல்ல முயன்றனர்.
இவர்கள் ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்றுப் கடற்கரைப் பகுதியில் படகுக்காக காத்திருந்தபோது, தகவல் அறிந்துபாம்பன் போலீஸார் விரைந்து வந்து 20 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications