இசை நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள பல்வேறு சபாக்களில் இன்று நடைபெறுவதாக இருந்த இசைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது மறைவுக்கு பல தரப்பினரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் எம்.எஸ்.ஸின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இந் நிலையில், எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள பல்வேறு சபாக்களில் இன்று நடைபெறுவதாகஇருந்த இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் நிகழ்ச்சி நேரத்தில் பக்திப் பாடல்களைப் பாடவும், பிரார்த்தனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications