சென்னை: வீட்டில் வெடிகுண்டுகள்!
சென்னை:
சென்னையில் கடத்தல், வழிப்பறி ஆகியவற்றுக்கு பயன்படுத்துவதற்காக வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன் இதுகுறித்து செய்தியாளர்களிடம்கூறுகையில்,
காரைக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருண்டை ராஜா என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கொடுத்ததகவலின் பேரில், சென்னை அருகே திருமுல்லைவாயில் பகுதியில் ஒரு வீட்டில் ஏராளமான வெடிகுண்டுகள்பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு திருமுல்லைவாயில் செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டைபோலீஸார் முற்றுகையிட்டனர். அந்த வீடு பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே புகுந்துசோதனையிட்டனர்.
அப்போது 10 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. வீட்டில் யாரும் இல்லை. இந்த வீடு ஒரு வாரமாகவேபூட்டப்பட்டிருப்பதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீட்டில் தங்கியிருந்தது தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
வெடிகுண்டுகளையும் அங்கேயே தயார் செய்து இங்கே கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கிறோம். கடத்தல், வழிப்பறி ஆகியவற்றின்போது பயன்படுத்துவதற்காகஇந்த குண்டுகளை அவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications