ஜெயேந்திரருக்காக தாக்கலான 2 மனுக்கள் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி & வேலூர்:

Jayendrarசங்கராச்சாரியாருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையும், சங்கரராமன்கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவையும் உச்ச நீதிமன்றம்இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

ஜெயேந்திரரை ஜாமீனில் விடக் கோரி யோகேந்திர குமார் திவாரி என்பவர் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனு போலீசாரின் தூண்டுதலின்பேரில் யாரோ விஷமிகள் தாக்கல் செய்துள்ளதாகவும், ஜெயேந்திரருக்கு ஜாமீன்கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அரைகுறை விவரங்களுடன் இவை (மனுக்கள் தள்ளுபடியாக வேண்டும் என்பதற்காக)தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சங்கராச்சாரியாருக்காக ஜாமீன் மனு தாக்கல்செய்ய இந்த மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயேந்திரரை சந்திக்க வந்த திவாரி:

இதற்கிடையே யோகேந்திர குமார் திவாரி இன்று வேலூர் சிறைக்கு வந்து ஜெயேந்திரரை சந்திக்க முயன்றார். ஆனால், அவருக்குபோலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

ஜெயேந்திரரின் ஒப்புதலையும் ஜாமீன் மனுவுடன் இணைக்கக் கூறி திவாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துஜெயேந்திரரின் ஒப்புதலைப் பெற திவாரி வேலூர் வந்தார்.

ஆனால், அவருக்கு ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும்உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இன்னொரு மனுவும் தள்ளுபடி:

இதே போல சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+