கொலை வழக்கில் 44 நாட்களில் தீர்ப்பு !!
சென்னை:
சென்னை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் 44 நாட்களில் கொலை வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டு சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் கடந்த மாதம் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாலாஜிஎன்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். திருமண மண்டபத்தில் வைத்து நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சென்னை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி அசோகன் விசாரித்து வந்தார். வழக்கின் சாட்சிகள் விசாரணை துரிதமாகநடத்தி முடிக்கப்பட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கொலை வழக்கு ஒன்று44 நாட்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications