வேறு கோர்ட்டுக்கு தா.கி. வழக்கு மாற்றம்?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை மதுரைஉயர்நீதிமன்றக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மதுரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜவாஹிருல்லா, மத்திய அமைச்சர் ரகுபதிக்கு நண்பர்என்பதால் வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றுமாறு தா.கி.யின் தம்பி ராமய்யா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலுவிசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இறுதித் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று கூறி தீர்ப்பை ஒத்திவைப்பதாகஅறிவித்தார்.












Click it and Unblock the Notifications