இலங்கை அகதியை சுட முயன்ற முன்னாள் எஸ்பி
கடையநல்லூர்:
இலங்கை அகதியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் டிஎஸ்பி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வசிக்கும் மருதையா பாண்டியன், ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பியாவார். பணியில்இருந்தபோது நல்ல சொத்து சேர்த்த இவருக்கு சுந்தரேசபுரம் பகுதியில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் உள்ளன.
நிலம் தொடர்பாக இவருக்கும் சந்தன பாண்டியன் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று முன் தினமும் இரு தரப்பினருக்கும்சண்டை மூண்டது. இது காவல் நிலையத்துக்குப் போனது. அங்கு வைத்து சமரசமும் பேசப்பட்டது.
இந் நிலையில் ஓய்வு பெற்ற எஸ்பி மருதையா பாண்டியன் நேற்றிரவு துப்பாக்கியுடன் சந்தன பாண்டியனின் தோட்டத்துக்கு வந்தார். அங்குகாவலாளியாகப் பணியாற்றும் இலங்கை அகதியான செபாஸ்டியனை (56) அடித்து உதைத்தார்.
சந்தன பாண்டியன் எங்கே என்று கேட்டவாரே அவரைத் தாக்கினார். செபாஸ்டியன் எதிர்த்து தாக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டார்மருதையா. நல்லவேளையாக குண்டு வேறு பக்கமாகப் போனது.
இதையடுத்து அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்துக்கு வந்து புகார் தந்தார் செபாஸ்டியன். போலீசார் மருதையாவைத் தேடிச்சென்றபோது ஆள் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications