ஆடிட்டர்: உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில், ஜெயேந்திரர் சார்பில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோலஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்திலேயே ஜெயேந்திரர் தரப்பில் மேலமுறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை சங்கராச்சாரியார் நாடியுள்ளதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஜெயேந்திரரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இநி நிலையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர்தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications