ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர்களின் ஒரு விசைப் படகு கடலில்மூழ்கியது. 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில்கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டிதங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று மீண்டும் மீன்பிடித்தலில் இறங்கியுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள்வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தி விரட்டியடித்தனர். இதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. அந்தப் படகில் இருந்த4 மீனவர்கள் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பி இன்னொரு படகில் ஏறி ராமேஸ்வரம் திரும்பினர்.