For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

80 பேருடன் ஜெயலட்சுமிக்கு தொடர்பு!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiதமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட போலீஸாருடன் ஜெயலட்சுமிக்குத் தொடர்பு இருந்ததாக ஏட்டு கண்ணன் சிபிஐ அதிகாரிகளிடம்தெரிவித்துள்ளார்.

ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் முதலில் ஜெயலட்சுமி, அவரது குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளிடம்விசாரணை நடத்தினர். பின்பு

ஜெயலட்சமி தனது புகாரில் குறிப்பிட்ட இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏட்டு கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இளங்கோவனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் சிலவற்றை இளங்கோவன்ஒப்படைத்ததாகத் தெரிகிறது.

அதனையடுத்து ஏட்டு கண்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கண்ணன்கூறியிருக்கிறார். ஜெயலட்சுமி ரூ. 3 கோடி வரை போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளார் என்றும் தமிழ்நாடு முழுவதும்80-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

ஜெயலட்சுமி போலீஸ் அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், அதற்கான நெகட்டிவ் பிலிம்கள், ஹோட்டல்களில் முக்கியபிரமுகர்களுடன் ஜெயலட்சுமி தங்கிய விவரங்கள் என 36 ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறார்.

ஜெயலட்சுமி தனது வாக்குமூலத்தில் சிலரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்றவர்களை மறைத்துவிட்டதற்கான காரணத்தையும் கண்ணன்விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X