ரவி சுப்பிரமணியம் தற்கொலை?!
காஞ்சிபுரம்:
அப்புவை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்தார். ரவிசுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக வரும் தகவல்களை அவர் மறுத்தார்.
அப்புவை காஞ்சிபுரம் கொண்டு வந்து நிருபர்கள் முன் ஆஜர்படுத்திய பிரேம்குமார் கூறியதாவது:
இன்று மாலை நீதிமன்றத்தில் அப்புவை ஆஜர்படுத்தவுள்ளோம். அவனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கநீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளோம்.
அப்பு பிடிபட்டது இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்பமாகும். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும். சங்கரராமன்கொலைக்கு முன்பாக காஞ்சி மடத்துக்கு 12 முறை வந்து சென்றிருக்கிறான் அப்பு. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
கோவா, நாக்பூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் அப்புவை தனிப் படை போலீசார் தேடியலைந்தனர். உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் அப்புவுடன் பல வழிகளில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.அதே நேரத்தில் திருப்பதி, புத்தூர், சித்தூர் ஆகிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம்.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக சித்தூரில் இரவு, பகலாக தூங்காமல் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டோம். அப்பு இருக்கும்இடம் உறுதியானதும் மாறுவேடத்தில் தனியார் வாகனங்களில் பாலகிருஷ்ணாபுரத்தை சுற்றி வந்தோம். மலையடிவாரபங்களாவில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தவுடன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்பு சரணடைந்தான்.
இந்தக் கொலையில் எனக்கு சம்பந்தமே இல்லை என்று அப்பு கூறியிருக்கிறான். எந்த கிரிமினல் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்?. அவனிடம் 6 மணி நேரம் மட்டுமே போலீஸ் விசாரித்திருக்கிறது. இன்னும் அவனிடம் நிறைய விசாரிக்கவேண்டியுள்ளது.
ரவி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை, விரைவில் அவனும் பிடிபடுவான்என்றார்.
ரவி மானஸ்தன் என்றும் அவனை போலீசார் அவமானப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வான் என்றும் அவனதுகுடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டதாகவே புரளிகிளம்பியுள்ளது.
இதைத் தான் பிரேம்குமார் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications