மதுரை பள்ளிக்கு நீதிபதி கண்டனம்
மதுரை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் குழுவைச் சேர்ந்த நீதிபதி சம்பத்வருகையையொட்டி மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் அவசரம் அவசரமாக கேட் போடப்பட்டது. இதை நீதிபதிசம்பத் கண்டித்தார்.
கும்பகோணத்தில் கடந்த ஜூலை மாதம் 16ம்தேதி பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 90 குழந்தைகள்கருகி இறந்தன. இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தீயணைக்கும் ஏற்பாடுகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான குழுவை தமிழகஅரசு நியமித்தது.
நீதிபதி சம்பத் குழு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஆய்வை மேற்கொள்ளவுள்ளது. முதல் கட்டமாக மதுரைக்கு வந்த நீதிபதி சம்பத், நரிமேடு பகுதியில் உள்ள சிலபள்ளிகளைப் பார்வையிட்டார்.
அப்போது ஒரு பள்ளியில் அவசரகதியில் நுழைவாயில் போடப்பட்டிருப்பதைப் பார்த்த நீதிபதி அதுகுறித்துவிசாரித்தார். இது நாள் வரை அந்தப் பள்ளியில் கேட்டே கிடையாது என்றும் குறுதிய பாதை மட்டுமேஇருந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தான் வருவதை அறிந்ததும் அவசரம் அவசரமாக கேட் போட்ட விதத்தை நீதிபதி கண்டித்தார். பின்னர் அந்தப்பள்ளிக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்தார். அப்போது குறுகலான மாடிப்படி இருப்பதைப் பார்த்த அவர் உடனடியாகஅதை இடித்து விட்டு விசாலமான படிகளுடன் அதை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications