For Quick Alerts
For Daily Alerts
Just In
பரிதி இளம்வழுதி மகன் சாவு
சென்னை:
முன்னாள் சட்டசபைத் துணை சபாநாயகரும், திமுக எம்.எல்.ஏவுமான பரிதி இளம்வழுதியின் மகன் தீபன் சென்னையில் மரணமடைந்தார்.
எழும்பூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியின் மகன் தீபன் (20) திருவண்ணாமலையில் உள்ள பொறியியல்கல்லூரியில் படித்து வந்தார்.
தீபனுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததாகத் தெரிகிறது. இந் நிலையில், சென்னைக்கு வந்திருந்த தீபனுக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டது. உடனடியாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றிமரணமடைந்தார்.
தீபன் மறைந்த தகவல் அறிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி பரிதி வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். திமுகவைச் சேர்ந்தமுக்கியத் தலைவர்களும் பரிதியின் மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Monday, December 20, 2004, 5:30 [IST]