சிறையில் தம் அடிக்க அனுமதி கோரி வழக்கு
சென்னை:
சிறைக்குள் சிகரெட் பிடிக்க அனுமதிக்க கோரி கருப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், சென்னை மத்திய சிறையில் நான் ஒரு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்தேன்.அப்போது சிகரெட் புகைக்க அனுமதி கேட்டேன். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
ஆனால் வேலூர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு சிகரெட் புகைக்க அனுமதி கொடுத்தனர். எனவே எல்லா சிறைகளிலும்ஒரே மாதியாக விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கைதிகள் சிகரெட் புகைக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்.
இதேபோல, கைதிகளுக்கு தினசரி 2 முறை தேநீர் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள்மிஸ்ரா, ஏ.கே.ராஜன் ஆகியோர் பரிசீலித்து விசாரணைக்கு ஏற்றனர்.
இந்த மனு தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.