எங்க அப்புவா இப்படி?: சகோதரி அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

Appu என் தம்பி அப்பு மிகவும் நல்லவன். அவன் கொலை செய்திருப்பான் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை என்று அப்புவின் அக்காள்பத்மா கூறியுள்ளார்.

சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தில்தான் அப்புவின் அக்காள் பத்மா வசிக்கிறார். இவரது பெயரிலும் அப்பு ஏராளமான நிலங்களைவாங்கிக் குவித்துள்ளான்.

அப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, என் தம்பி மிகவும் நல்லவன், அமைதியானவன். இங்கு அவனுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது.இங்கு மாதத்திற்கு நாலைந்து தடவை வருவான். வந்தால் சில நிமிடங்கள்தான் எங்களுடன் இருப்பான். பின்னர் சென்று விடுவான்.

இங்கு வரும்போது அவன் மட்டும்தான் வருவான். கூட யாரையும் கூப்பிட்டு வர மாட்டான். அவனைப் பற்றி வெளியாகும் செய்திகளைஎன்னால் நம்ப முடியவில்லை.

தீபாவளிக்கு மறுநாள் இங்கு வந்தான். சாப்பிட்டான். அப்போது கூட எனது கணவர் அவனிடம், சங்கரராமன் கொலை வழக்கில்உன்னையும் தேடுகிறார்களாமே என்று கேட்டார். அதற்கு அவன், அதெல்லாம் இல்லை, எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டுச் சென்று விட்டான். அதன் பிறகு அவன் வரவே இல்லை என்றார் பத்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+