சங்கர மடம் வந்த சித்தூர் எஸ்.பியின் மனைவி!
காஞ்சிபுரம்:
சித்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் மனைவி காஞ்சி சங்கர மடம் வந்து சென்றது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து சங்கர மடம் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. அங்கு வந்து செல்வோர் குறித்து போலீஸார்தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந் நிலையில் காஞ்சி சங்கர மடத்திற்கு வந்து சென்ற ஒரு பெண்மணி குறித்து விசாரித்து அறிந்த போலீஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.கூலிப் படைத் தலைவன் அப்புவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளன் மனைவிதான்அந்தப் பெண்மணி.
அப்புவைத் தேடி சித்தூர் மாவட்டத்தில் தமிழக போலீஸார் வலை விரித்துக் காத்திருந்த நேரத்தில், அந்த மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளரின் மனைவி சங்கர மடம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு ஆந்திர மாநில அரசுக்குச் சொந்தமான காரில் 3 பெண்களுடன் எஸ்.பியின் மனைவி சங்கர மடம் வந்துள்ளார். சுமார்15 நிமிடங்கள் அவர்கள் மடத்தில் இருந்தனர்.
விஜயேந்திரரை எஸ்.பியின் மனைவி சந்தித்ததாக தெரிகிறது. இவர் எதற்காக சங்கர மடம் வந்தார், என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்என்பது குறித்து போலீஸ் தரப்பு விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications