ரவி சிக்கியது உறுதி: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் சென்னை அருகே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர், 3வது குற்றவாளியான கூலிப் படைத் தலைவன் அப்பு, கூலிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள், போலி குற்றவாளிகள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படையை ஏற்பாடுசெய்த ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகிறார்.
இந் நிலையில் சென்னை அருகே உள்ள படாளம் என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டரிடம் ரவிசுப்ரமணியம் சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்த மறுக்கிறது.
ஆனால், நேற்று முன் தினம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், விசாரணை அதிகாரியான எஸ்பி பிரேம்குமார்இப்போது ரவி சுப்பிரமணியத்தை கட்டுப்பாட்டில் எடுக்கச் சென்றுள்ளார். இதனால் தான் அவர் இன்று நீதிமன்றம் வரவில்லை என்றார்.
இதனால் ரவி சுப்ரமணியம் உண்மையிலேயே போலீஸ் பிடியில் சிக்கிவிட்டதாகவே தெரிகிறது. போலீஸ் வசம் வந்துள்ள ரவிசுப்ரமணியத்திடம் மகாபலிபுரம் செல்லும் வழியில் உத்தண்டி என்ற ஊரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணைநடத்தியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏதுவாக அவர் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
-
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்.. எரியாத எல்பிஜி அடுப்புகள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!












Click it and Unblock the Notifications