ஜெயேந்திரர்: ஜெவை சந்திக்க பாஜக குழு அமைப்பு
சென்னை:
ஜெயேந்திரரை வீட்டுக் காவலில் வைக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க பா.ஜ.க. ஒரு குழுாவ அமைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசின் நெருக்கடிதான் முக்கிய காரணம். அதை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடமை.
சங்கரராமன் கொலையை அரசியல் சாயம் பூசியது நாங்கள் அல்ல, திமுகதான். நாட்டில் எத்தனையோ கொலைகள் நடந்தபோதும்அதுகுறித்து கவலைப்படாத திமுக ஜெயேந்திரர் விவகாரத்தில் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான உணர்வுகளை களங்கப்படுத்தி, அதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின்ஒரே குறிக்கோள். முதல்வர் ஜெயலலிதாவும், ஜெயேந்திரரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஒரு பெரும்அரசியல் சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள்.
வீரப்பன், வீராணம் என ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிறப்புகளும், செல்வாக்கும் கிடைத்ததால், அதைக் குலைக்க வேண்டும்என்பதற்காக ஜெயேந்திரரை பகடைக் காயாக திமுக பயன்படுத்தியுள்ளது. இந்து மதத்தின் பெருமையினை சீர்குலைக்கும் முயற்சி இது.
ஜெயேந்திரரை சிறையில் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டுக் காவலில் வைத்தும் அவரை விசாரிக்கலாம்.சிறையில் இருப்பதால் ஒரு மடாதிபதியாக அவரால் செயல்பட முடியவில்லை. இந்தக் கோரிக்கையை அரசு நிராகரிப்பது நியாயமல்ல.
இதுதொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேச பாஜக சார்பில் ஒரு குழு அமைத்துள்ளோம். முதல்வரை சந்திக்க நேரம் கிடைத்ததும் அவரைசந்தித்து சிறைக் காவலிலிருந்து வீட்டுக் காவலுக்கு ஜெயேந்திரரை மாற்றக் கோருவோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு இருப்பது திமுக அமைச்சர்களின் மனமாற்றத்தைக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் திரைப்படத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது. இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும் அவரது கட்சியினரும்தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் என திரையுலகினரை எதிர்த்து அரசியல் செய்வது அநாகரீகமானது. இது ஜனநாயகமும் இல்லை.படங்களை ஓட விட மாட்டோம், பெட்டியைப் பறிப்போம் என கூறுவது ஒரு தொழிலை நசுக்க முயற்சிப்பது போலாகும் என்றார் அவர்.