ராமநாதபுரம்: கலாம் குறித்து பாடம் நடத்தும் பாலகன்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 12 வயதாகும் முகம்மது வாசிம் அக்ரம் என்ற சிறுவன், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியாகச்சென்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறான்.
ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம், அனீஸ் பாத்திமா தம்பதியினரின் மகன்தான் முகம்மது வாசிம்அக்ரம். அப்துல் கலாம் படித்த ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில்தான் வாசிம் அக்ரம் தற்போது 8வது படித்து வருகிறான்.
அப்துல் கலாம் மீது அதிக ஈடுபாடு கொண்ட வாசிம் அக்ரம், கலாம் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து அவரது தீவிரரசிகராகி விட்டான். படிப்பில் மட்டுமல்லாது ஓவியம் தீட்டுவதிலும் வாசிம் அக்ரம் கில்லாடியாம். ஓவியப் போட்டிகள் பலவற்றில்கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளான்.
அப்துல் கலாம் குறித்து தான் அறிந்து கொண்ட பல்வேறு விஷயங்களையும், அவரது வல்லரசு கனவையும், மாணவர்களுக்குஅவர் கூறிய அறிவுரைகளையும் மற்ற மாணவர்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டான் அப்துல் கலாம்.
இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கிராமப் பள்ளிகளுக்கு சென்றுமாணவர்களிடம் அப்துல் கலாம் குறித்து உரையாற்றி வருகிறான் வாசிம் அக்ரம்.
வாசிம் அக்ரமின் உரையை இதுவரை 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். கை தேர்ந்த ஆசிரியர் போலவாசிம் அக்ரம் பேசுவதைக் கேட்கும் பள்ளிக் கூட ஆசிரியர்களும் அசந்து போய் விடுகிறார்கள்.
உரையாற்றப் போகும் பள்ளிக் கூடங்களில் வாசிம் அக்ரம் தனது ஓவியங்களையும் காட்சிக்கு வைத்து மாணவர்களிடம்தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஊட்டுகிறான்.
அக்ரமின் பேச்சில் முக்கியமாக இடம் பெறுவது, சூரிய சக்தியை சரியாக பயன்படுத்திக் கொள்வது, மத நல்லிணக்கம்ஆகியவைதான். கலாமின் தூதுவராக மாணவர்களிடம் செல்லும் அக்ரமுக்கு ஒரு சபாஷ்!