For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுந்தரேச அய்யர் ரெக்கார்ட் பிரேக்!!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Sundaresa Ayyarசங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், சங்கர மடம் சார்பில் சென்னையில் நடத்தப்படும்குழந்தைகள் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், சுந்தரேச அய்யரின் மருமகனுமான அனந்த நாராயணன், ஆந்திரா வங்கி கிளைமேலாளர் ஆகியோடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

சங்கர மடம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை நடத்தப்பட்டுவருகிறது. இதன் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அனந்த நாராயணன். இவர் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின் மருமகன் ஆவார்.

அனந்த நாராயணன் இன்று காஞ்சிபுரம் போலீஸார் முன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். அதேபோல சுந்தரேச அய்யரும் இன்றுவிசாரிக்கப்பட்டார். அய்யர் விசாரிக்கப்படுவது இது 13 வது முறையாகும். இதன்மூலம் சங்கரராமன் கொலை வழக்கில் மிக அதிகமானமுறை விசாரிக்கப்பட்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அய்யர்.

அதேபோல சென்னை அடையாறில் உள்ள ஆந்திரா வங்கி கிளை மேலாளர் குந்தனும் இன்று காஞ்சிபுரம் போலீஸாரால்விசாரிக்கப்பட்டார்.

சுந்தரேச அய்யருக்கு மடத்தின் நிதி விவகாரங்கள் அனைத்தும் அத்துபடி என போலீஸ் நம்புகிறது. ஆனாலும் வாயைத் திறக்க அய்யர்மறுப்பதால் இப்போது அவரது மருமகனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அய்யருக்கு டென்சனை மேலும்கூட்டியுள்ளனர் போலீசார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X