இலங்கை அரசின் புதிய திட்டம்: புலிகள் நிராகரிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இலங்கை அரசு முன் வைத்த புதிய சமரச திட்டத்தை விடுதலைப் புலிகள்நிராகரித்து விட்டனர்.
நார்வே அமைதி தூதர் எரிக் சோல்ஹைமிடம் இலங்கை அரசின் அமைதிக்குழு செயலாளர் ஜெயந்த தனபாலா, அரசின் புதிய சமரசதிட்டத்தைக் கொடுத்தார். அதை லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்திடம் எரிக் சோல்ஹைம்ஒப்படைத்தார்.
பின்பு அத் திட்டம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் அரசின் புதிய திட்டத்தை புலிகள் நிராகரித்து விட்டதாக அந்த இயக்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசின் புதிய திட்டம் தெளிவாக இல்லை. புலிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு அதில் எந்த தீர்வும் இல்லை. வடகிழக்கு மாகாணத்தில்இடைக்கால ஏற்பாடுகளை செய்ய அரசு ஆர்வம் தெரிவித்திருந்தபோதிலும், புலிகள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டம் தொடர்பாகஎதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அத் திட்டத்தை புலிகள் நிராகரித்து விட்டனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளின் இந்த நிராகரிப்பை ஆண்டன் பாலசிங்கம் அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications