ஜெயலலிதா திருந்தவில்லை என்கிறார் வைகோ
பழனி:
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நீதியும் கிடையாது, நியாயமும் கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பழனியில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதைக் கேட்டு பழனி கோயிலில் மூலவர் சிலையை மறைத்து பஞ்சலோக சிலையை ஜெயலலிதாவைத்தார். அதன் பலனாக 40 மக்களவைத் தொகுதிகளையும் இழந்தார். பின்னர் சிலையை அகற்றினார். இதையடுத்து தீபாவளிநள்ளிரவில் சிலை வைக்கச் சொன்ன மடாதிபதியையே கைது செய்தார்.
இப்போதும் ஜெயலலிதா திருந்தவில்லை. பழனி கோயில் கர்ப்ப கிரகத்தில் வெள்ளிச் சர விளக்குகளை தொங்க விட்டுள்ளார்.இதனால் சரம் சரமாக தோல்வியைத் தழுவுவார். ஜெயலலிதாவிடம் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.
தான் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவள் என்று கூறும் ஜெயலலிதா, அவர் கைது செய்யப்பட்டபோது தர்மபுரியில் மூன்றுமாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதது ஏன்? இந்த ஆட்சியில் நீதியும்கிடையாது, நியாயமும் கிடையாது.
சிறையில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நான் பொங்கலைக் கொண்டாட முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எனக்குவிஷேச பொங்கல்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். அனைத்துத்தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications