கிறிஸ்துமஸ்: கலாம், பர்னாலா, ஜெ. வாழ்த்து
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர்ஜெயலலிதா ஆகியோர் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கலாம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் மனிதர்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்நாளாகும். உங்களது நண்பர்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும்போது அவர்களுக்கு உற்சாகம்கொடுங்கள். எனது அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இந்திய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனியவாழ்த்துக்கள். மனித மதிப்பீடுகளை பரவச் செய்யவும், உலகில் அமைதியை வளர்க்கவும் கிறிஸ்தவ மக்கள்பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்தவ மக்களுக்குவாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கிறிஸ்துவின் பிறப்புக்கு முன், இறப்புக்குப் பின்என்று காலம் பிரிக்கப்படுகிறது. இதற்கு கிறிஸ்துவின் காலம் கடந்து நிற்கும் கருணைப் பண்பே காரணம்.
என்றென்றும் அறவழியில் நடத்தும் ஆற்றல் பெற்றது கிறிஸ்துவின் கருணை. அந்த அற்புதக் கருணையைஉலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக முன்னாள் அமைச்சர்திருநாவுக்கரசர், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் சேதுராமன்ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications