ரூ.100 கோடியில் மேஜிக் அகாடமி
திருச்சி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ. 100 கோடி மதிப்பில் மாஜிக் பயிற்சி அகாடமி உருவாக்கப்படவுள்ளதாகபிரபல மேஜிக் நிபுணரும், அகில இந்திய மேஜிக் கலைஞர்கள் சம்மேளனத்தின் தலைவருமான ஜாதுகர் ஆனந்த்கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராஜஸ்தான் மாநில அரசின் நிதியுதவி மற்றும் பிறருடையநன்கொடைகள் மூலம் இந்த மேஜிக் பயிற்சி அகாடமி உருவாக்கப்படவுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அகாடமிஅமைக்கப்பட்டு விடும்.
மேஜிக் எனப்படும் மாயாஜாலக் கலை அழிந்து வருகிறது. இந்திரஜாலம் என்ற பழம்பெரும் கலையிலிருந்துபிறந்ததுதான் மாயாஜாலம் எனப்படும் மேஜிக். இதைக் காக்க அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும், மேஜிக் கலைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து தேவைப்படும் உதவிகளைவழங்க வேண்டும். பொழுதுபோக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
நான் இதுவரை உலகின் 36 நாடுகளில் 26,000க்கும் மேற்பட்ட மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். இது ஒருசாதனை அளவாகும் என்றார் ஜாதுகர் ஆனந்த்.












Click it and Unblock the Notifications