பெரியார் நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தந்தை பெரியாரின் 37-வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பகுத்தறிவுப் பகலவன் என்று அழைக்கப்படும் திராவிடர் கழக நிறுவனரான தந்தை பெரியாரின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
அண்ணா சாலை சிம்சன் நிறுவனம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications