சேதம்: ஹெலிகாப்டரில் ஜெயலலிதா ஆய்வு
சென்னை:
சென்னையில் கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார். பின்னர்பிரதமர் மன்மோகன் சிங்குடன் சேத விவரங்களை அவர் தொலைபேசி மூலம் விளக்கினார்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் கடற்படை, கடலோரக்காவல்படை, மற்றும் தீயணைப்புப் படை, போலீசார் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மீட்ப்பு பணிகளில்ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2 லட்சம் உணவுப் பொட்டங்கள்வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று பகல் 1.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட சென்னைமெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளை காரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்பு விமான நிலையத்திற்குச் சென்ற அவர் ஹெலிகாப்டரில்புறப்பட்டு எண்ணூ
சேத விவரங்களை அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்கு 044-25383783, 25384670 ஆகியதொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கல்பாக்கம் அணு மின் நிலையம் தப்பியது:
சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் பத்திரமாக இருப்பதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பினால் பாதிப்பு ஏதும்இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கத்திலும் இன்று கடல் கொந்தளிப்பினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 15 பேர் வரை இறந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதும் நிலையத்தின் இரண்டு யூனிட்களின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications