அழுகும் உடல்கள்; தொற்று நோய் பரவும் அபாயம்
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் மீட்கப்படாமல்இருப்பதால் அவை அழுகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டனம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்களாககாணப்படுகிறது. பல கிராமங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு இருந்தவர்களின் சடலங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
பல பகுதிகளை நெருங்க முடியாத அளவுக்கு கடல் நீர் ஊடுறுவியுள்ளது. இந்தப் பகுதிகளில் இறந்து கிடப்போரின் உடல்களை மீட்கமுடியாததால் அவை அழுகத் தொடங்கியுள்ளன. இதேபோல, அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சடலங்கள்இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவையும் அழுகி வருகின்றன.
உடல்கள் அழுகத் தொடங்கியுள்ளதால், அவற்றின் மூலம் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று இரவு முழுவதும்மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். இன்று காலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications