தொண்டர்களுக்கு திமுக, மதிமுக, பாமக உத்தரவு
சென்னை:
தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவைக்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதே போல மீட்புப் பணியில் ஈடுபடுமாறு தனது கட்சியின் தொண்டர்களுக்கு மதிமுக தலைவர் வைகோவும், பா.ம.க. தலைவர் ராமதாசும்உத்தரவிட்டுள்ளனர்.
கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் ஏற்பட்டள்ள கடல் கொந்தளிப்பில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டோர், இடிந்த வீடுகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள், இறந்தகால் நடைகள் என அத்தனை விவரங்களையும் அறிய முன்னாள் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுக்களை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும்.
இந்தக் குழுவினர் தங்களது பகுதிகளில் ஏற்பட்ட சேத விவரங்களை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் முழு அளவில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications